தனது முதலிரவு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ‘பாக்கியலட்சுமி’ – சுவாரஸ்யமான கதைக்களத்துடன் சீரியல்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கிய லட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா மற்றும் ஈஸ்வரி மூவரும் தங்கள் கல்யாண அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதே போல் இன்னொரு பக்கம் எழில் கோபிநாத்துடன் இரவு தூங்க செல்கிறார். அப்போது கோபிநாத் அவருக்கு ஏகப்பட்ட அட்வைஸ் கொடுக்கிறார்.

ரகசியம் பேசும் ஈஸ்வரி மற்றும் பாக்கியா:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ஜெனி அவரது மாமியார் பாக்கியா லட்சுமியிடம் வந்து இரவு பால் தருவதாக கூறியதாகவும் அதனை தன வாங்க வந்ததாகவும் கூறுகிறார். இதனால் பாக்கியா மற்றும் ஈஸ்வரி இருவரும் சிரித்து கொள்கின்றனர். பின்பு, ஈஸ்வரி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஈஸ்வரி தனக்கு திருமணம் முடிந்த அன்று என்ன நடந்தது என்று சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் பாக்கியலட்சுமி முதல் இரவன்று தனக்கு என்ன நடந்தது என்று தனது மாமியாரிடம் விவரிக்கிறார். தனது கணவர் தன்னை விரும்பவில்லை என்றும் அன்று இரவு தன்னையும், தான் ஏன் படிக்கவில்லை என்று கேள்விகளை கேட்டதாகவும் கூறுகிறார். இதனால் ஈஸ்வரி ஆச்சரியம் அடைகிறார். இதற்கு பின்பு, எழில் தனது அப்பாவுடன் தூங்க செல்கிறார்.

அட்வைஸ் செய்யும் அப்பா:

அவரது அப்பாவோ அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தான் வேலை பார்க்க வேண்டியுள்ளது என்றும் கூறுகிறார். சரி, என்று எழில் தூங்க போகிறார். ஆனால், அவருக்கு துக்கம் வராததால் அவர் புரண்டு கொண்டே இருக்கிறார். இதனை கவனித்த அவரது அப்பா ஏன் துக்கம் வரவில்லை என்று கேள்வி கேட்கிறார். ஏன் என்று தெரியவில்லை என்று கூறியதும் அவரது அப்பா அவருக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுகிறார்.

மீரா மிதுனின் வாழ்க்கை கதை படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத எழில் கீழே சென்று தூங்கி விடுகிறார். காலையில் எழில் ஹாலில் படுத்திருப்பதை பார்த்து பாக்கியலட்சுமி என்ன நடந்தது என்று கேட்கிறார். அதற்கு எழில் அப்பா திட்டிவிட்டால் கூட தாங்கி கொள்ளலாம் என்றும் அட்வைஸ் செய்தல் தாங்க முடியவில்லை என்று கூறுகிறார். இதனை மறைந்திருந்து கேட்கும் கோபிநாத் அவர் பாக்கியா மற்றும் கோபி மீது கோவம் அடைந்து இருவரையும் திட்டுகிறார். இதோடு இன்றைய எபிசொட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here