இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவருக்குமே வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை இருக்கும் நிலையில் உடல்நிலையை கவனித்து கொள்ள அவ்வளவாக நேரம் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்நிலையில் தற்போது ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்கு சூப்பர் டிப்ஸ் ஒன்றை இந்த பதிவில் காணலாம்.
டிப்ஸ்
உலகமே இப்பொழுது கணினி மயமாகி விட்டது. படித்து வேலைக்கு செல்பவர்கள் தான் இந்த காலத்தில் அதிகமாக உள்ளனர். மேலும் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை என்பதால் ஆரோக்கியத்தில் எந்த கவனமும் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
கிடைக்கும் நேரத்தில் ஒய்வு எடுக்க மட்டுமே பலரும் ஓடிக்கொண்டுள்ளனர். இப்பொழுது ஆபீஸில் உட்கார்ந்து இருந்தபடி வேலை பார்ப்பதால் பலருக்கும் முதுகு வலி ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது அதற்கான டிப்ஸை பார்க்கலாம்.
அதாவது நாள் முழுவதும் கணினி முன்பே உட்காராமல் 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை நடந்து கொடுக்க வேண்டும். தண்ணீரை அருகிலேயே வைக்காமல் தூரத்தில் வைத்து கொண்டால் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் சாக்கில் நடந்து செல்லலாம். மேலும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது முடிந்தவரை நடந்தே செல்லும் பழக்கத்தை வைத்து கொள்ளலாம்.
இதனால் எலும்புகள் சோர்வில்லாமல் வலுப்படும். அதன் பிறகு சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் குளிக்க போவதற்கு முன்பாக முதுகில் கடுகு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை பலோவ் செய்தால் கண்டிப்பாக நல்ல பலனை பெறலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்