கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பப்லு பிரித்விராஜ் இப்பொழுது ஷீத்தல் என்பவரை திருமணம் செய்ய உள்ள நிலையில் இருவரும் எடுத்துக் கொண்ட வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பப்லு ப்ரித்விராஜ்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை சினிமா உலகை விட்டு விலகாமல் தொடர்ந்து நடித்து வருபவர் தான் நம்ம பப்லு பிரித்விராஜ். பல சேனல்களிலும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து உள்ளார். இன்னொரு பக்கம் டான்சர் ஆகவும் கலைக்கு வர கலக்கி வந்தவர் தான் நம்ம பப்லு. பரிமாணங்களில் தனது திறமைகளை காட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவரை தெரியாத ஆளே கிடையாது. அந்த அளவுக்கு பேமஸான ஒரு நபர். தன்னுடன் நீண்ட நாட்களாக தோழியாக இருந்தவரை தான் பப்லு பிரித்விராஜ் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறக்க அவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 24 வயதான நிலையில் பப்லு பிரித்திவியும் அவரது மனைவியும் தான் அவரை பார்த்து கொண்டனர்.
என்ன காரியம் பண்றீங்க பிரியங்கா.., உங்களால மட்டும் தான் இது முடியும்.., அதிர்ச்சி வீடியோ!
இப்படி இருக்க திடீரென ஷீத்தலை திருமணம் செய்ய இருப்பதாக பப்லு பிரித்வி ராஜ் அறிவித்ததும் பலருக்கும் பெரிய ஷாக். இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா?? என்று திட்டவும் ஆரம்பித்தனர். இப்பொழுது இருவருக்கும் விரைவில் திருமணம் முடிய உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. கொஞ்சலாக ஆரம்பிக்கப்பட்ட ரீல்ஸ் கடைசியில் ரொமான்ஸில் போய் முடிய இருவரும் கட்டிப் பிடித்து படி வீடியோவை முடித்து விட்டனர்.