கோலியை டார்கெட் பண்ணும் பாக், வீரர்., நேற்றைய போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.,சபாஷ் சரியான போட்டி!!

0
கோலியை டார்கெட் பண்ணும் பாக், வீரர்., நேற்றைய போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.,சபாஷ் சரியான போட்டி!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி பாபர் அசாம், விராட் கோலி சாதனையை முறியடிக்க காத்துக்கொண்டுள்ளார்.

விராட் கோலி VS பாபர் அசாம்

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகள் கொண்ட T20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய பாபர் 59 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் உட்பட 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் பாபர் அசாம் 87 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச T20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நான் திமிராக நடந்து கொள்ள மாட்டேன்., பும்ரா அளித்த பேட்டியில் வியந்த ரசிகர்கள்., BCCI வெளியிட்ட அறிவிப்பு!!

மேலும் இதன் மூலம் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்துள்ளார். அதாவது விராட் கோலி அதிவேகமாக 3000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பதையே தனது டார்கெட் ஆக பாபர் அசாம் வைத்துள்ளார். இவர்கள் இருவரும் முதலிடத்தில் இருக்க, அடுத்தபடியாக மார்ட்டின் கப்டில், ரோகித் சர்மா உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here