பாரதி கண்ணம்மா தெலுங்கு சீரியலான கார்த்திகை தீபம் சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் வெண்பா கண்ணம்மாவிற்கு பாரதி கையாலேயே விஷ மருந்தை கொடுத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா(கார்த்திகை தீபம்)
கார்த்திகை தீபம் சீரியலில் கண்ணம்மா பாரதியின் வீட்டிலேயே தங்கியுள்ளார். மேலும் பாரதியும் கண்ணம்மாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது குழந்தைகளுக்காக வீட்டில் தங்க சம்மதித்தார். இது வெண்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. இவர்களை நிரந்தரமாக பிரிக்க தான் 8 வருடங்களாக போராடி வந்தார் வெண்பா. ஆனால் தற்போதோ நிலைமை கைமீறி போனதையடுத்து, கண்ணம்மாவை கொல்ல முடிவெடுத்துவிட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏனெனில் பாரதியின் மனது எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்காக கண்ணம்மாவை கொலை செய்ய துணிந்து விட்டார் வெண்பா. சௌந்தர்யா குடும்பத்தில் முக்கியமான விசேஷம் ஒன்று நடந்து கொண்டுள்ளது. அதில் வெண்பாவும் கலந்துகொள்கிறார். இதில் கண்ணம்மாவிற்கு வழக்கம் போல மயக்கம் ஏற்படுகிறது. இதனால் பாரதி அவரை சரியாக மாத்திரை எடுத்து கொள்ளும்படி கூறுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குட்டி கண்ணனுடன் ஜீவா – வைரலாகும் கியூட் போட்டோஸ்!!
இதனை வெண்பாவும் சொல்ல கண்ணம்மாவிற்கு கோவம் வருகிறது. அடுத்ததாக குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்ணம்மாவை மாத்திரை எடுத்து கொள்ள சொல்கின்றனர். கடைசியில் கண்ணம்மா மாத்திரை சாப்பிட ஒத்துக்கொள்கிறார். ஆனால் இதுதான் சாக்கு என்று கண்ணம்மாவிற்கு விஷ மாத்திரையை பாரதியிடம் கொடுக்கிறார். இது தெரியாமல் பாரதி இதனை கண்ணம்மாவிடம் கொடுக்கிறார். அவரும் சாப்பிட்டு விட கடைசியில் மயக்கமடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.