அம்மா, மகன் பாசத்தை வெளிப்படுத்தி கண்கலங்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ!!

0

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக இருபதற்கு முக்கிய காரணமே அம்மா மகன் பாசத்தை முதன்மையாக வைத்து எடுத்ததே. இந்நிலையில் தற்போது பாக்கியாவும் எழிலும் தங்களது பாசத்தை பரிமாறும் அளவிற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி சிக்கியதால் இருந்து எழிலிடம் பணிவாக நடந்து கொள்கிறார். இன்றைக்கு வெளியான எபிசோடில் கூட கோபி எழிலின் வண்டியில் செல்கிறார். மேலும் தான் நல்லவன் என்றும் குடும்பம் தான் முக்கியம் என்றும் எழிலிடம் கெஞ்சி கொண்டிருந்தார் கோபி. அதாவது எழிலுக்கு தன் அம்மா சந்தோசமாக இருப்பது தான் முக்கியம். இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிய வந்தால் அம்மா உடைந்து போய் விடுவார் என்றும் நினைக்கிறார்.

‘கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படமாட்டாது’ – திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி!!

ஆனால் கோபிக்கு ராதிகாவை விடவும் மனதில்லை. ஆனால் ராஜேஷால் பிரச்சனை வந்து விடுமோ என்றும் பயப்படுகிறார். இந்த கதையின் மையக்கருவே ஒரு இல்லத்தரசி வீட்டில் படும் பாடு தான். அதிலும் மகனின் பாசம் எப்பொழுதுமே ஒரு தாய்க்கு உயர்ந்தது தான். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் எழில், பாக்கியா. சிறந்த அம்மாவிற்கான விருதையும் பாக்கியலட்சுமி தான் கைப்பற்றினார்.

அப்படி இருக்க பாக்கியா மற்றும் எழில் எம்.குமரன் படத்தின் இடம் பெற்ற ‘இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய்’ என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்த ரீல்ஸ் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கவே தற்போது வைரலாகி வருகிறது. தாய், மகன் பாசத்தை பார்த்தும் பலரும் கண்கலங்கியுள்ளனர்.

                           இந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here