பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈஸ்வரி கடைசியில் எழிலை பிளாக்மெயில் செய்து வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கிறார். இதை பாக்கியா, ஜெனியிடம் சொல்ல அவர்கள் அதிர்ச்சியாகின்றனர். பாக்கியா இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லியும் ஈஸ்வரி உன் பேச்சை எல்லாம் கேட்க முடியாது கல்யாணம் நடந்தே தீரனும் என சத்தம் போடுகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது மட்டுமல்லாமல் இந்த இந்த கல்யாணம் எவ்வளவு சீக்கிரம் நடத்தனுமோ அவ்வளவு சீக்கிரம் நடக்கணும் என்று சொல்கிறார். இந்நிலையில் இந்த சீரியல் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஈஸ்வரி ஒருவழியாக எல்லாத்தையும் சரிகட்டி கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்து விடுவாராம். ஆனால் கல்யாண மஹாலில் எழில்-வர்ஷினி மணமேடையில் அமர்ந்திருக்கும் போது பாக்கியா மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைப்பாராம். அதாவது எழில் கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத பாக்கியா மஹாலில் இந்த கல்யாணம் நடக்கக் கூடாது என சண்டை போடுவாராம்.
அட்ரா சக்க., இத்தன பேரும் மொத்தமா தளபதி 67ல இணைய போறாங்களா.., தரமான சம்பவம் செய்யும் லோகேஷ்!!!
இதற்கு ஈஸ்வரி கொஞ்சம் கூட ஒத்துக் கொள்ளாததால் இறுதியில் எதிர்த்து பேச ஆரம்பித்து விடுவாராம். அதாவது “பொறுக்கிய பெத்த நீங்க எல்லாம் ஏன் புள்ள கல்யாணத்தைப் பற்றி பேசக்கூடாது”. எனக்கு என் புள்ளையோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் என சொல்லி விடுவாராம். இதை கேட்டால் ஈஸ்வரி ஆடிப் போய் விடுவாராம். பின் அதே மேடையில் அமிர்தாவுக்கும் எழிலுக்கும் திருமணம் செய்து வைப்பாராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.