பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியா ராதிகாவுடன் டூருக்கு செல்லலாம் என்று முடிவெடுக்க தற்போது கோபி மாட்டிக்கொள்வாரா?? இல்லையா?? என்ற திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியா தற்போது பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வந்துள்ள நிலையில் வீடே ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளது.இப்படி இருக்க தற்போது கோபி புது பிரச்சனை ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அதாவது ராதிகா வெளியூருக்கு ட்ரிப் செல்வதால் இனியாவையும் அழைக்கிறார். பாக்கியாவும் சரி என்று சொல்ல கோபி விஷயம் தெரியாமல் அதற்கு ஒத்து கொள்கிறார். கடைசியில் தான் அது ராதிகா என்ற உண்மை தெரிந்தது பதறி போகிறார்.
எப்படி தப்பிப்பது என்றும் தெரியவில்லை. இன்றைய எபிசோடில் கூட இனியாவை ராதிகா வீட்டில் விடுவதற்காக கோபி அழைத்து செல்கிறார். வழியில் கோபி எவ்வளவு சமாளித்தும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது இனியாவிற்கு உண்மை தெரிவது போன்ற சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியாவிடம் சென்று அப்பா நல்லவரு கிடையாதா?? என்று அழுதபடி இனியா கேட்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்