விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இன்றைய எபிசோடில் ஹெட் மாஸ்டர் வீட்டிற்கு சென்று கெஞ்சுகிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இனியாவின் வாழ்க்கையில் அவ்வளவு தானா? தன்னை மாதிரி ஆகிவிடுவாளா? என்று புலம்பிக்கொண்டுள்ளார். எழில் எவ்வளவு சமாதானம் செய்தும் கேட்பதாக இல்லை. மேலும் டிசியில் வெளியே அனுப்பியதற்கான காரணத்தையும் சேர்த்து எழுதி விடுகின்றனர்.
இதனால் அவருக்கு வேறு ஸ்கூலில் படிக்க வாய்ப்பும் இல்லை. இதனால் மறுபடியும் ஸ்கூலில் சேர்க்க ஹெட் மாஸ்டரிடம் பேசலாம் என்று முடிவெடுக்கிறார். ஸ்கூலுக்கு செல்ல அந்த ஹெட் மாஸ்டர் பாக்கியாவையும், எழிலையும் அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் பாக்கியா கதறி அழுக ஆரம்பிக்கிறார். அடுத்ததாக பாக்கியா ஹெட் மாஸ்டர் வீட்டிற்கு சென்று கேட்கலாம் என்று எழிலிடம் கெஞ்சுகிறார். கடைசியில் எழில் ஒத்துக்கொள்கிறார். அடுத்ததாக ஸ்கூல் முடியும் வரை காத்திருந்து அவர் வீட்டிற்கு செல்கின்றனர்.
அப்பொழுது ஹெட் மாஸ்டர் வர இங்க என்ன பண்றிங்க என்று மிரட்டுகிறார். அடுத்து பாக்கியா கொஞ்சம் பேச வேண்டும் என்று கெஞ்சுகிறார். இங்க இருந்து மரியாதையா கிளம்புங்க என்று அவமானபடுத்துகிறார். ஆனாலும் பாக்கியா இங்கிருந்து கிளம்புவதாக இல்லை.
அவரின் வீட்டு வாசலிலேயே உட்காருகிறார். மீண்டும் ஹெட் மாஸ்டரிடம் பாக்கியா கொஞ்சம் பேச வேண்டும் என்று கெஞ்சுகிறார். என் பொண்ணு வாழ்க்கை இது என்று தொடர்ந்து கெஞ்சுகிறார். இனியாவை வெளியே அனுப்பியது என் முடிவு மட்டுமில்லை, ஸ்கூல் முடிவு.
என்னால ஒண்ணுமே செய்ய முடியாது என்று சொல்ல பாக்கியா ஹெட் மாஸ்டர் காலில் விழுகிறார். என் பொண்ணு வாழ்க்கை இது ஒரு சான்ஸ் கொடுங்க என்று கதறி அழுகிறார். இதனால் மனமிறங்கும் ஹெட் மாஸ்டர் வீட்டிற்குள்ளே அழைத்து செல்கிறார். ஹெட் மாஸ்டர் எவ்வளவு எடுத்து சொல்லியும் பாக்கியா கெஞ்சிக்கொண்டே உள்ளார்.
தான் கிராமத்தில் இருந்து வந்ததாகவும், படிக்காமல் தான் எவ்வளவு கஷ்டப்பட்டதாகவும் சொல்கிறார். இத்தனை நாட்கள் தன் கணவர் தன்னுடன் பிடிக்காமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார். ஸ்கூலில் சேர்க்க மேனேஜ்மென்ட்டிடம் பேசுவதாக சொல்கிறார். இதனால் பாக்கிய சந்தோஷமாகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.