பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பழனியுடன் வெளியில் சுற்றுவதை பார்த்த கோபிக்கு சுத்தமாக பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அதுமட்டுமின்றி, இன்னொரு பக்கம் இனியா ராதிகாவிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கடுப்பில் இருக்கும் ராதிகா கேன்டீனில் வேலை செய்பவர்களுக்கு யூனிபார்ம் கொடுக்கிறார். இதனால் பாக்கியா-ராதிகா இடையே எதோ பிரச்சனை வருகிறது. மேலும் கோபி இரண்டாவது முறையாக பழனியுடன் பாக்கியாவை பார்க்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.
இதனால் உச்சகட்ட கடுப்பாகிக்கிறார். அதோடு இல்லாமல், ராதிகா ரோட்டில் இனியாவை சரனுடன் சேர்த்து வைத்து பார்க்கிறார். இதனால் ஷாக்காகும் ராதிகா பெரிய பிரச்சனையே செய்து விடுவாராம். வழக்கம் போல கோபி எந்த பக்கம் பேசுவது என்று தெரியாமல் முழித்து கொண்டிருப்பாராம்.