பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் வீட்டில் ராதிகா இருப்பதால் அது மற்றவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் அமைதியாக இருந்தாலும் ஈஸ்வரி தொடர்ந்து ராதிகாவுக்கு ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோட்டில் ராதிகா இங்கு நடக்கும் விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்வாராம். அவர் ஈஸ்வரியை எதுவும் பேச விடாமல் செய்ய பல திட்டங்களை சொல்லி கொடுப்பாராம். அதன்படி செய்யும் ராதிகா முதலில் ஈஸ்வரியும் கோபியும் பிரிக்க முடிவெடுப்பாராம். எப்படியோ கோபி நம்பும் படி ஈஸ்வரி மீது அவர் செய்யாத பழியை எல்லாம் சுமத்துவாராம்.
கோபியும் இதை நம்பிக்கொண்டு நீங்களா அம்மா இப்படி என்ன செஞ்சீங்க என கேட்பாராம். தன் மகன் தன்னை தாங்கிக் கொள்ள முடியாத ஈஸ்வரிக்கு நெஞ்சு வலி வந்து விடுமாம். இறுதியில் இவரை காப்பாற்ற பாக்கியா ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லுவாராம்.