விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் எபிசோட் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத ட்விஸ்டுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாக்கியா கோபியிடம் விட்ட சவாலில் ஜெயிக்க அதிக சமையல் ஆர்டரை எடுத்தது மட்டுமல்லாமல் டெண்டர் முறையில் கார்ப்பரேட் கம்பெனியில் சமைப்பதற்கும் ஒப்பந்தம் ஆகிறார். ஆனால் இவருக்கு டெண்டர் கிடைத்ததை நினைத்து ராதிகாவும், கோபியும் பொறாமை படுகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியல் பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த மொழி சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்திற்கு புதிய ஜோடி இருப்பதாக கதை ஒளிபரப்பாகி வருகிறது.
வெற்றி இயக்குனருடன் கூட்டணி வைத்த சூப்பர் ஸ்டார் .., தரமான சம்பவங்களுடன் உருவாகும் ரஜினி 170!!!
இந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பிரபல சீரியல் ஆக்டர் ரஞ்சித் என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் செந்தூர பூவே சீரியலில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் என்ட்ரி கொடுப்பதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்யாவுக்கு ஜோடியாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோபியை போன்று பாக்யாவும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.