பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியின் அம்மாவின் பிறந்தநாளுக்கு பாக்கியா தன் குடும்பத்துடன் வருகின்றனர். அப்போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் பழனிச்சாமி, அவரது அம்மா அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிச்சாமியை நினைத்து அவரது அம்மா வருத்தப்பட பாக்கியா அவருக்கு கல்யாணம் பண்ணி வைப்பது என்னோட பொறுப்பு என்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பிறகு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். அடுத்ததாக அனைவரும் அமர்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியாவின் சமையல் அருமையாக இருப்பதாக பழனிச்சாமியின் அம்மா பாராட்டுகிறார்.அந்த நேரத்தில் எழில் அமிர்தா அழகா பாடுவா என்று சொல்ல அவரை பழனிச்சாமி பாட சொல்கிறார். முதலில் மறுக்கும் அமிர்தா பின் பாடுகிறார். அடுத்ததாக அனைவரும் வீட்டுக்கு கிளம்புகின்றனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.05.2023) – முழு விவரம் உள்ளே!!
இந்த பக்கம் கோபியிடம் ராதிகா அமைதியாக பேச அவர் ஷாக் ஆகிறார். அடுத்ததாக ராதிகா கோபியிடம் நம்ம வீட்டுக்கே போகலாம் என்று சொல்ல அதிர்ச்சி அடைகிறார். அப்போது தான் கோபிக்கு இனியாவிடம் நான் எக்ஸாம் முடியுற வரைக்கும் இங்கிருந்து போக மாட்டேன் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இதனால் கோபி என்ன செய்வதென்று தெரியாமல் புலம்ப இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.