
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவுக்கு காண்ட்ராக்ட் கிடைக்காததால் கோபி, ஈஸ்வரி எல்லோரும் அவரை மிகவும் மட்டம் தட்டி பேசுகின்றனர். இன்னொரு பக்கம் ராதிகாவும் பாக்கியாவும் பழைய நண்பர்கள் போல் மீண்டும் பேச ஆரம்பிக்கின்றன. இது ஈஸ்வரிக்கும் கோபிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இப்படி இருக்கையில் இந்த சீரியலுக்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பழனிச்சாமி பாக்யாவிடம் அந்த காண்ட்ராக்ட் எடுத்தவங்க மீண்டும் உங்களுக்கே தரேன்னு சொல்றாங்க. அவர்களிடம் பேசலாம் என்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
பின் பாக்கியா பழனிசாமி இருவரும் அவரைப் பார்த்து பேசுகின்றனர். அப்போது அவர் 2 லட்சம் பணத்தை கட்டினால் கான்ட்ராக்ட்டை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்கிறார். இதனால் பாக்கியா பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறார். அப்போது பழனிச்சாமி பாக்கியாவை சமாதானப்படுத்துகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது பழனிச்சாமியின் பேச்சைக் கேட்டு மீண்டும் பாக்கியா பணத்தை கொடுத்து ஏமாந்து விடுவாரோ என்பது போல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை திடீர் நிறுத்தம்.., காரணம் என்ன?? விளக்கமளித்த நிறுவனம்!!!