
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பாக்கியாவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் எழிலின் வாழ்க்கையை எப்படி சரி கட்ட போகிறோம் என புலம்பிக் கொண்டிருக்கும் பாக்கியாவுக்கு செழியன் அடுத்த பிரச்சனையை கொடுக்கிறார். இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் உள்ளார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் பாக்கியா மாலினியிடம் செழியனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார். அதற்கு மாலினி செழியன் ஏமாற்றி விட்டதாக சொல்ல பாக்கியா உன்னை ஏமாற்றியது தப்புதான். இனிமேல் நீ என் பையன் வாழ்க்கையில வரக்கூடாது என்று சொல்ல மாலினி அங்கிருந்து கிளம்புகிறார். இதை கேட்ட மாலினி கோபத்துடன் பாக்கியா வீட்டுக்கு வந்து செழியனை சத்தம் போடுகிறார். இதை பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாக இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
