விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இப்போது பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ராதிகா பாக்கியா வீட்டில் இருந்து கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தினம் தினம் டார்ச்சர் கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரி ராதிகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என திட்டம் போடுகிறார். ஒரு பக்கம் குடும்பம், இன்னொரு பக்கம் ராதிகா இவர்களிடம் மாட்டிக் கொண்டு கோபி அவஸ்தை படுகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ராதிகா ஒவ்வொரு தடவையும் பாக்கியாவை அசிங்கப்படுத்த வேண்டும் என பல விஷயங்களை செய்ய ஆனால் அது அவருக்கு திரும்பி விடுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் பாக்கியாவிடம் அசிங்கப்பட்டு நிற்கிறார். இப்படி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த சீரியல் முடிய போவதாக ஒரு புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யாருன்னு தெரியுதா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!
அதாவது கோபி, பாக்கியா ஒன்றாக நிற்க சுபம் போடப்பட்ட ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே சீரியல் முடிய போகிறதா?? சீரியலை முடிக்க வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அடுத்து வரும் நாட்களில் தான் இந்த சீரியல் முடியுமா?? இல்லை தொடர்ந்து ஓடுமா?? என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.