பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. ராதிகா கொஞ்சம் கொஞ்சமாக கோபியின் வலையில் விழுந்து வருகிறார். மேலும் ராதிகாவின் அண்ணனும், அம்மாவும் கோபியை எப்படியும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது ஒரு சைடு இருக்க பாக்கியா எடுத்த சபதத்துல ஜெயிச்சே தீருவேன்னு உறுதியா இருக்காங்க. இதனால் குடும்பமே அவருக்கு எதிரா தான் இருக்கு. ஆனால் அதை பாக்கியா கண்டுக்கவே இல்லை. கோபி முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு தான் இருக்காங்க நம்ம பாக்கியா. அடுத்து என்ன நடக்க போகுதோனு மக்கள் ஆர்வமா பார்த்துகிட்டு இருக்காங்க.
பெங்காலி சீரியல் அப்டேட் படி பார்த்தோம்னா ராதிகா கோபிக்கு ஓகே சொல்லி கல்யாணம் பண்ணிக்குவாங்க. அதுக்கு முன்னாடி பாக்கியா குடும்பத்தால தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் நெனச்சு பார்த்து வில்லியா மாறிடுவாங்க. இனியா இப்போ அப்பா அப்பான்னு உருகிகிட்டு இருக்க நிலைமைல ராதிகா அவரை சேர்த்துக்கவே மாட்டாங்க. கோபிக்கும் வேற வழியும் இல்ல. ஆக மொத்தம் சீரியல் வேற ட்ராக் மாறி போக போகுது.