விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் எழில் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் எழில்
பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. அம்மா மகன் பாசத்தில் காட்டப்பட்டுள்ளதால் அனைவர்க்கும் பிடித்து போனது. அதிலும் அம்மா மீது பாசத்தை பொழியும் எழில் தான் தற்போது மக்கள் மத்தியில் நிலைத்துள்ளவர். இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சென்னைக்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விஜய் டிவி ரக்சனுக்கு இப்படி ஒரு நெருங்கிய உறவா?? இதனை நாலு இது தெரியாம போச்சே!!
அதன் பிறகு ஒரு குறும்படம் ஒன்றில் நாயகனாக நடித்துள்ளார். அதன் பிறகு அரண்மனை கிளி சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் டான்ஸ் ஜோடியில் நடனமாடியுள்ளார். ஆனாலும் அவருக்கு கிடைக்காத அங்கீகாரம் பாக்கியலட்சுமி சீரியலில் தான் கிடைத்துள்ளது. அதன் பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் உடன் சிறிய ரோலில் நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாத ஒன்றே. அவருக்கு தற்போது 24 வயது ஆகிறது. தற்போது வரை சிங்கிள் தானாம். அவருக்கு டைரக்டர் ஆக வேண்டும் என்று தான் ஆசையாம். அதற்காக தான் விட முயற்சியால் உழைத்து கொண்டிருக்கிறாம்.