பாக்கியாவிடம் பணத்தை கேட்டு வீட்டை சுற்றி வளைத்த அக்கம்பக்கத்தினர் – கோவத்தின் உச்சிக்கு சென்ற கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமோ  ஒன்று வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியா சமையல் ஆர்டரை வெற்றிகரமாக முடித்து விட அவருக்கு பணமும் வந்து விடுகிறது. ஆனால் அந்த பணத்தையும் பறிகொடுத்து ஏமாந்து விட இதனால் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என மிகவும் குழப்பமாக இருக்கிறார் பாக்கியா.

மேலும்  கோபி பிரிந்து விடலாம் எனும் அளவிற்கு சென்று விட்டார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது. பாக்கியா அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார். ஜெனி, எழில் அனைவரும் ஆறுதல் சொல்ல எந்த பலனும் இல்லாமல் போகிறது.
 
இந்நிலையில்  ப்ரோமோ ஒன்று  வெளியாகியுள்ளது.  அதாவது அக்கம் பக்கத்தினர் சமையல் வேலை செய்ததற்கான சம்பளத்தை கேட்டு வீட்டு வாசலில் வந்து விட இதனால் கோபமடைகிறார் கோபி. அவர்களுக்கு ஏதாவது பதில் சொல்லி அனுப்பு என்று சத்தம் போடுகிறார்.  இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டே நிற்கிறார் பாக்கியா.
அப்பொழுது பாக்கியாவின் மாமனார் அந்த பணத்தை தருவதாக முன்வருகிறார். இதனால்  பணத்தை எடுக்க பேங்க்கிற்கு செல்கின்றனர். ஆனால் அந்த  பணத்தை சொந்த  ஊரில்  உள்ள  பிரான்ச்சில் தான்  எடுக்க  முடியும்  என்று  சொல்கின்றனர். இதனால்  அங்கிருந்து  கிளம்புகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here