விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கோபிக்கு தக்க பதிலடி கொடுக்கிறார் பாக்கியா. இந்த ப்ரோமோ பலரையும் கவர்ந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் கடைசி நேரத்தில் வந்து பணத்தை கொடுக்க பாக்கியா அப்பொழுது தான் நிம்மதியடைகிறார். அதுமட்டுமில்லாமல் அனைத்து பணத்தையும் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து மீதி பணத்தை பாக்கியாவிடம் கொடுக்கிறார் எழில். இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, இனியா ஸ்கூல் பீஸ் கட்ட பணம் கேட்கிறார்.
மேலும் ஈஸ்வரி வீட்டு செலவுக்கு பணம் வேண்டும் என்றும் சொல்கிறார். ஆனால் கோபியிடம் போதுமான அளவு பணம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். மேலும் தனது நண்பனிடம் கால் செய்து கடன் கேட்கிறார். இதனை தூரத்தில் இருந்து கேட்டு விடும் பாக்கியா கோபி ஆபீஸிற்கு செல்கிறார்.
கோபி பாக்கியாவை பார்த்ததும் கோவத்தில் எழுந்து செல்ல அப்பொழுது பணத்தை கொடுக்கிறார். இதனை பார்த்த கோபிக்கு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்தியது நியாபகத்திற்கு வருகிறது. கண்கலங்க பாக்கியவை பார்க்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்