பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவின் திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டுள்ளது. இடை இடையே பிரச்சனையும் நடந்து கொண்டு தான் உள்ளது. ராதிகாவால் எந்த பிரச்சனையையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்பொழுது அடுத்த வினையாக ராஜேஷ் வேறு மண்டபத்தில் வந்து பிரச்சனை செய்ய இருக்கிறார். இதனால் குடும்பமே கூனி குறுகி நிற்கிறது. ராதிகாவின் அம்மா இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று ராதிகாவின் மனதில் வன்மத்தை விதைக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் கோவமடையும் ராதிகா கோபியையே எதிர்த்து பேச ஆரம்பிக்கிறார். ஒரு பக்கம் ராமமூர்த்தி, ராஜேஷ் நிற்க இன்னொரு பக்கம் கோபி கத்தி கொண்டிருக்க வெறுப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறார் ராதிகா. இதனால் கோபியை எதிர்த்து பேசி அசிங்கப்படுத்தும் சூழ்நிலை ராதிகாவிற்கு ஏற்படுகிறது. இப்பொழுதாவது கோபிக்கு புத்தி வந்து பாக்கியாவை நினைப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.