காசுக்காக  வாழ்க்கையை  பணயம் வைக்கும்  பாக்கியா.., கோபியை அந்தலைசிந்தலையாகிய ராமமூர்த்தி!!

0
காசுக்காக  வாழ்க்கையை  பணயம் வைக்கும்  பாக்கியா.., கோபியை அந்தலைசிந்தலையாகிய ராமமூர்த்தி!!
காசுக்காக  வாழ்க்கையை  பணயம் வைக்கும்  பாக்கியா.., கோபியை அந்தலைசிந்தலையாகிய ராமமூர்த்தி!!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி – ராதிகா திருமணம் நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்கு தற்போது  விடை கிடைத்துள்ளது.

பாக்கியலட்சுமி அப்டேட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது கோபி – ராதிகா திருமணம் நடைபெறுமா என்ற ஆர்வத்தில் இலத்தரசிகள் உள்ளனர். இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கோபியின் திருமணம் நடக்கும் இடத்தை தெரிந்து கொண்ட ராமமூர்த்தி அங்கு சென்று கல்யாண வீட்டையே போர்களமாக்குகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனது மகன் இன்னொரு பொண்ணுடன் மாலையும் கழுத்துமாக நிற்பதை பார்த்த ராமமூர்த்திக்கு கோபம் தலைக்கேறியது.  இதனால் கோபியை, அடித்து பாக்கியா உடன் தான் வாழனும் என பிரச்சனை பண்ணுகிறார். ஆனால் கோபி தந்தை என்று கூட பார்க்காமல் தள்ளிவிட்டு வெளியே போயா என மரியாதையை குறைவாக பேசுகிறார்.

Bigg Boss நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம் .. விளக்கம் கொடுத்த நடிகர்!!

இந்த செயலை தாங்க முடியாத பாக்கியா ராமமூர்த்தியை சமாளித்து, அவரின் வாழ்க்கை எப்படியோ போகட்டும் என அழைத்து செல்கிறார். பிறகு எனக்கு இந்த ஆர்டர் ரொம்ப முக்கியம் மாமா. யாருக்காகவும் என்னோட வேலையை இழக்க முடியாது என சொல்லி பாக்கியா அழுகிறார்.

இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்து விட்டது. இதுக்கு அப்புறம்  பாக்கியா   தனது கணவரின் கல்யாணம் என்று தெரிந்தே சமைக்க ரெடியாகி விட்டால். இந்த கொடுமை வேற எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். காசுக்காக இப்படி பாக்கியா இறங்கிட்டாங்களே  என்று நெட்டிசன்கள் கலாய்த்து  வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here