பாக்கியலட்சுமி சீரியலை கலாய்க்கும் விதமாக தற்போது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்யலட்சுமி சீரியலில் பாக்கியாவை பிடிக்காமல் திருமணம் கோபி வேண்டா வெறுப்பாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும் தன் பழைய காதலை மறக்காமல் ராதிகாவின் பின்னாலேயே சுற்றி வருகிறார். இது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பான சம்பவத்துடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.
நாளுக்கு நாள் பாக்கியா மீது வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார். ராதிகாவிற்கு தேடி தேடி சென்று உதவி செய்கிறார் கோபி. ராதிகாவை ஒருபோதும் கைவிடுவதாக இல்லை என்ற சத்தியமும் செய்து விட்டார். இந்நிலையில்தான் நெட்டிசன்கள் இவர்களை கலாய்த்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.
அதாவது காத்துவாக்குல 2 காதல் படத்தில் பஸ் சீன் ஒன்று வரும். அதில் நயன்தாரா சமந்தா மற்றும் விஜய் சேதுபதி சிவன் தொங்கி கொண்டிருப்பது போன்று ஒரு புகைப்படம் இருக்கும். அதனை பாக்கியா மற்றும் ராதிகா போல மாற்றியும் விஜய் சேதுபதி நிற்கும் இடத்தில் கோபி இருப்பது போன்றும் வடிவமைத்துள்ளனர். இதனை பார்த்த பலரும் சிரித்து விட்டனர்.