கோபி அடிக்கடி வீட்டிற்கு வருவதை பற்றிய பாக்கியாவிடம் சொல்லிவிடும் மயூ – கோவத்தின் உச்சத்தில் செழியன்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிடம் மயூ தன் வீட்டிற்கு ஒரு அங்கிள் வருவது சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்கிறார். மேலும் ஜெனி மற்றும் செழியனிடையே பிரச்சனை ஏற்படுகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் மயூ இல்லாத நேரமாக கோபி ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். ராதிகா கோபியிடம் இது ஏதும் பிரச்சனை ஆகாதா?? என்று கேட்கிறார். ஏனெனில் ஏற்கனவே பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டுள்ளது. இதில் அவளுக்கு தெரியாமல் நீங்க வருவது தெரிந்தால் என்ன ஆகும்?? என்று கேட்க கோபி கோவமடைகிறார்.

உனக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்தா அவங்க யாரும் வர மாட்டாங்க. ஆனால் நான் தான் வரணும். அவங்களுக்கு பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை என்றும் சொல்கிறார். அடுத்ததாக மயூ பாக்கியா வீட்டில் இருக்க தனக்கு இருக்கும் பிரச்னையை பற்றி சொல்கிறார்.

தன் வீட்டில் ஒரு அங்கிள் வருவார் என்றும் அதனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சிரிப்பார்கள் என்றும் சொல்லி வருத்தப்படுகிறார். பாக்கியா இதற்கெல்லாம் கஷ்டப்பட கூடாது என்றும் சொல்கிறார். அடித்ததாக வீட்டிற்கு ஒரு விருந்தாளி வர ஜெனியிடம் ஏதும் விசேஷம் இல்லையா? என்று கேட்கின்றனர்.

மேலும் செழியன் பாட்டியும் ஜெனியை திட்டுகிறார். வேலைக்கும் போறதில்லை. சும்மா வீட்டுல இருக்குறதுக்கு குழந்தையாவாச்சும் பெத்து கொடு என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் செழியனிடம் செல்கிறார். இன்னைக்கு வந்த சொந்தக்காரங்க நமக்கு குழந்தை எப்போ பொறக்கும்னு கேக்குறாங்க என்று சொல்கிறார்.

மேலும் பாட்டியும் அடிக்கடி கேட்டதாக சொல்கிறார். இதற்கு செழியன் அதை எதுக்கு என்கிட்ட கேக்குற என்று சொல்கிறார். இதனால் ஷாக்காக்கும் ஜெனி வேறு யார் கிட்ட நான் போய் கேக்குறது என்று சொல்ல தனக்கு 24 வயது தான் ஆகிறது என்றும், செட்டில் ஆனதுக்கு பிறகு தான் குழந்தை என்று சொல்லிவிட்டு செல்கிறார். அடுத்ததாக அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க ஜெனி தனது வீட்டிற்கு செல்வதாக சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here