பாக்கியலட்சுமி சீரியலில் எழில் தன்னை பார்த்ததை வீட்டில் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் பாக்கியாவிற்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்து சமாளிக்கிறார். வீட்டிற்கு வரும் எழிலுக்கு இது அதிர்ச்சியாக உள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழில் அமிர்தா வீட்டில் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார். அமிர்தா, நீண்ட நாட்களுக்கு பிறகு தன் குடும்பம் எழிலால் சந்தோசமாக இருப்பதை நினைத்து நிம்மதியடைகிறார். அமிர்தா அதற்கு எழிலிடம் நன்றியும் சொல்கிறார்.
எழிலுக்கு தனது அப்பா செய்யும் துரோகம் நியாபகத்திற்கு வருகிறது. பாக்கியா வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்க கோபி பாக்கியாவை அழைத்து கொண்டு வாங்கி வந்த புதிய வண்டியை காட்டுகிறார். இதனால் குடும்பமே சந்தோஷமாகிறது. தன் மகன் எப்பொழுதுமே இப்படி தான் என்று மெச்சி கொள்கிறார் கோபியின் அம்மா.
அந்த சமயம் பார்த்து எழில் வீட்டிற்கு வர அனைத்தையும் பார்த்து ஷாக்காகிறார். தன் மனைவி மீது தனக்கு அதிக அன்பு இருப்பது போன்று சொல்கிறார். இதனை கேட்க கேட்க எழிலுக்கு கோவமாக வருகிறது. உங்க அம்மா சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என்று அடிக்கடி சொல்கிறார் கோபி.
மேலும் வண்டியை ஒட்டி பார்க்கலாம் என்று சொல்ல பாக்கியாவிற்கு பேரதிர்ச்சியாக உள்ளது. அதுவும் பாக்கியா ஓட்ட கோபி பின்னால் அமர்ந்து கொள்கிறார். இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் எழில் அப்பா போடும் நாடகத்தை நினைத்து வருந்துகிறார்.
பாக்கியா இதனை ஆசையாக வந்து எழிலிடம் சொல்கிறார். உங்க அப்பா ரொம்ப நல்லவரு.. வாய தொறந்து பேச மாட்டாரு தவிர என் மேல ரொம்ப பாசம் என்று சொல்ல தனது அப்பாவை நினைத்து கோவமடைகிறார். மேலும் எழில் கோபியிடமே சென்று நீங்க உலக மகா நடிகர் என்றும் சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்