பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மயூவின் நிலைமையை நினைத்து கோபியை வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் கோபி தன்னால் அது முடியாது என்று சொல்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா குஜராத்தி சமையலை சொதப்பியதால் கோபிக்கு நிகழ்ச்சியில் அவமானமாக போகிறது. வீட்டிற்கு வந்து அனைவரிடமும் சொல்லி கத்துகிறார். உனக்கு வத்தக்குழம்பு வைக்க மட்டும் தான் தெரியும் என்று சொல்கிறார்.
கோபி பேசியதை நினைத்து கண்கலங்குகிறார் பாக்கியா. எப்படியும் குஜராத்தி ஸ்டைலில் சமைத்தே தீர வேண்டும் என்று இருக்கிறார் பாக்கியா. இதனை பார்த்த பாக்கியாவின் அத்தை உன்னால் கண்டிப்பாக இதெல்லாம் முடியாது, என் மகன் அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்று சொல்கிறார்.
இதனால் பாக்கியா மனமுடைந்து விடுகிறார். தன்னால் எல்லாம் முடியும் என்று ஓவர் திமிரில் இருந்து விட்டதாக சொல்கிறார். இரவு 2 முறை நன்கு செய்து பார்த்து காலையில் ஜெனி, எழிலிடம் கொடுக்கிறார். அவர்களும் பாராட்ட தான் அசால்டாக இருந்து விட்டதாக சொல்கிறார்.
அதன் பின் பாக்கியா வீட்டில் வேலை பார்க்கும் செல்வியின் மகன் ஸ்போர்ட்ஸில் கலந்து கொண்டிருப்பது தெரிய வர எழில் அதனை பாராட்டுகிறார். அதன் பிறகு மறுபடியும் ராதிகா வீட்டிற்கு கோபி செல்கிறார். ராதிகாவின் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிய என்ன என்று கேட்கிறார்.
அல்ட்ரா மாடர்ன் உடையில் இணையத்தை பதற வைத்த ஷாலு ஷாமு… போட்டோஷூட் வீடியோ உள்ளே!!!
மயூவிற்கு நடந்ததை பற்றி சொல்லி விடுகிறார். மேலும் இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கோபி என்னால் உங்கள் இருவரையும் விட்டு இருக்க முடியாது, ராஜேஷ் விட்டுட்டு போன மாதிரி நான் உன்ன விட்டுட்டு போக மாட்டேன் என்று சொல்கிறார்.
இதனை மறுக்கும் ராதிகா மயூ இந்த சின்ன வயசுலேயே ரொம்ப கஷ்டபட்டுடா, திரும்பவும் அவளுக்கு கஷ்டம் கொடுக்க நான் விரும்பல என்று சொல்கிறார். மேலும் தான் வக்கீல் ஆபிஸுக்கு கிளம்புவதாக சொல்ல தான் வந்து விடுவதாக வற்புறுத்தி அழைத்து செல்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்