அமிர்தாவுடன் நெருக்கமாக பழக ஆரம்பிக்கும் எழில் – சந்தேகத்தில் அமிர்தாவின் அப்பா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எழிலிடம் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மன்றாடுகிறார். அடுத்ததாக அமிர்தா எழிலிடம் பேசிக்கொண்டிருப்பதை அமிர்தாவின் அப்பா பார்த்து விடுகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எழிலிடம் வண்டியில் செல்ல தன்னை பற்றி எழிலிடம் எடுத்து சொல்கிறார். மேலும் தான் வண்டி ஓட்டுவதாக சொல்கிறார். என்ன ஒரு நடிப்பு என்றும் கிண்டல் செய்யவும் செய்கிறார். அடுத்து பாக்கியா மசாலா பொருட்களை எல்லாம் சந்தோசத்துடன் தயாரித்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக இனியா சந்தோஷோடம் சென்று பேசுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தன் அம்மா உங்களிடம் பேச சொல்லி சொன்னதாகவும் சொல்கிறார். மேலும் தான் உங்களிடம் சினிமாவிற்கு வந்திருக்க கூடாது என்றும் சொல்கிறார். இனி உங்க கிட்ட எப்போதும் போல பேசுவேன் என்றும் சொல்கிறார். அடுத்ததாக அமிர்தாவை காட்டுகின்றனர். எழிலும் அமிர்தாவும் பேசிகொண்டுள்ளனர். தான் தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்கிறார்.

படத்தின் பூஜை விழாவிற்கு அமிர்தாவை அழைக்கிறார். அடுத்ததாக அமிர்தாவின் அப்பா இருவரையும் ஒன்றாக பார்த்து விடுகிறார். அடுத்ததாக மசாலா பொருட்களை சிஸ்டரிடம் கொடுப்பதற்காக காத்துக்கொண்டுள்ளனர். சிஸ்டர் அங்கு வர இத்தனை நாட்கள் தாமதமாவதற்கான காரணத்தை சொல்கிறார்.

யாஷிகா கிட்ட இப்படி ஒரு மாற்றமா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

ஒரு பெண் ஒரு வேலையை செய்ய எவ்வளவு கஷ்டங்களை தாங்க வேண்டியது இருக்கு என்று சொல்கிறார். மசாலைவை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு பணத்தையும் வாங்கி கொள்கிறார். அமிர்தா எழிலுக்கு கால் செய்து பேசிகொண்டுள்ளார்.

சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அமிர்தாவின் அப்பாவிற்கு சந்தேகமாகிறது. இதனை அம்மாவிடம் சொல்கிறார். அமிர்தா தன் கையை விட்டு செல்வதாக சொல்கிறார். பாக்கியா வீட்டில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டுள்ளனர். கோபி வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் நன்றாக பேசுகிறார். ஜெனியும் கோபிக்கு நன்றி சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here