பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியின் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சமையல் செய்து கொடுக்க அது கடைசியில் சொதப்பி விடுகிறது. இதனால் கோபி ராதிகாவை கண்டபடி திட்டி அனுப்புகிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா குஜராத்தி சமையலை முதன்முறையாக செய்து பார்க்கிறார். அதுவும் கோபியின் நண்பர் வீட்டு விசேஷத்தில் சமைத்து தருகிறார். வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் குஜராத்தி டேஸ்ட் எதிலுமே இல்லை என்று கண்டபடி பேசுகின்றனர்.
இதனால் கோபிக்கு கோவம் அதிகமாகிறது. தனது நண்பரிடமும் கோபி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அவர் எதுவுமே சொல்லவும் இல்லை. அதுவே கோபிக்கு அவமானமாக ஆகிறது.
இதனால் வழி முழுக்க பாக்கியாவை கண்டபடி திட்டி விடுகிறார். வீட்டிற்கு வந்தும் பாக்கியாவை திட்டுகிறார். எழில் என்ன விஷயம் என்று கேட்க அங்கு நடந்தவற்றை இனியா கூறுகிறார். கோபி தன் மானமே போய்விட்டதாக எண்ணுகிறார். அந்த நேரத்தில் கோபியின் நண்பர் கால் செய்ய பாக்கியா பேசுகிறார்.
இத நீங்க விடவே மாட்டீங்க போல.. நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான ரித்திகா சிங்!!
தனக்கு அந்த பணம் வேண்டாம் என்று கூறி வைத்து விடுகிறார். மேலும் கோபி நீ வத்த குழம்பு வைக்கிறத தவிர வேறு வேற எதுக்கும் லாயக்கு இல்லை என்று கூறுகிறார். இதனால் பாக்கியா உடைந்து போகிறார்.
அடுத்ததாக ராதிகாவை காட்ட, மயூ கோவமாகவே இருப்பதை பார்த்து ஏன் என்று கேட்கிறார். அதற்கு கோபியை சுத்தமாக பிடிக்கவில்லை என்றே கூறி விடுகிறார். ராதிகா எவ்வளவு சமாதானம் செய்தும் மயூ இனிமேல் கோபி வீட்டிற்கு வர கூடாது என்று கூறுகிறார். ராதிகா என்ன சொல்வது என்றே தெரியாமல் உள்ளார். கோபி வீட்டிற்கு வருவதால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தவறாக பேசுவதாகவும், தன்னுடன் விளையாட குழந்தைகளை விட மாட்டேங்குறாங்க என்று சொல்லி அழுகிறார். இதனால் ராதிகா அதிர்ச்சியாகிறார்!!
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்