‘ராஜேஷ் சொல்றதை நம்பாத, நம்ம குடும்பம் தான் எனக்கு முக்கியம்’ – எழிலிடம் கெஞ்சும் கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபிக்கு கால் செய்ய அதனை எடுக்க முடியாமல் தவிக்கிறார் கோபி. மேலும் தனக்கு ஏன் இந்த நிலைமை என்று புலம்பிக்கொண்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் எழிலின் மிரட்டலுக்கு பயந்து கோபி பாக்கியாவின் பிஸ்னஸ்க்கு ஒத்துக்கொள்கிறார். மேலும் பாக்கியாவுக்கு குழப்பமாகவே உள்ளது. இதனை செல்வியிடம் சொல்ல அவரும் ஷாக்காகிறார். மேலும் நேற்று கோபி தன்னிடம் பாசமாக பேசியதையும் சொல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். எழிலுக்கு இது புதிதாக தான் உள்ளது. நேற்று அவர் என்னிடம் அன்பாக பேசியதை சொல்லி சந்தோசப்படுகிறார். இதனை கேட்ட எழிலுக்கு என்னவோ போல ஆகிறது. அடுத்து ஸ்கூலுக்கு இனியா கிளம்ப செழியன் அழைத்து செல்வதாக சொல்கிறார். அடுத்ததாக எழிலன் தனது படத்தின் பூஜை நாளைக்கு நடக்க இருப்பதாக சொல்ல வீடே சந்தோஷமாகிறது.

கோபிக்கு இதனை சொல்ல சொல்கின்றனர். ஆனால் எழில் அப்பா எல்லாம் ஒன்றும் வர வேண்டாம் என்று சொல்கிறார் எழில். இதனால் வீட்டில் உள்ளவர்கள் ஏன் எதற்கு என்று கேட்கின்றனர். அடுத்ததாக கோபி கீழே இறங்கி வருகிறார். பாக்கியா கோபியிடம் எழிலின் பட பூஜை பற்றி சொல்கிறார். இதனால் கோபி வாழ்த்து சொல்ல அதனை எழில் கண்டுகொள்ளவே இல்லை.

கொரோனா நோய்த்தொற்று எதிரொலி – இந்தியாவிற்கு 135 கோடி நிதியுதவி வழங்கிய கூகிள்!!

அடுத்து கோபி தன்னை ஆபீஸ் வரைக்கும் டிராப் செய்ய முடியுமா?? என்று கேட்கிறார். எழிலும் சரி என்று சொல்ல அழைத்து செல்கிறார். ஒரு நெருங்கிய நண்பர் போல பேசுகிறார். அடுத்ததாக கார் நிஜமாகவே ரிப்பேர் ஆகிடுச்சா??என்று கேட்கிறார். மேலும் தன்னை யாரோ ராஜேஷ் என்பவன் தவறாக சொன்னதற்காக என்னை சந்தேகப்படுகிறாய்.

இதெல்லாம் ஞாயமா?? என்று கேட்க தான் போட்டோவை பார்த்ததாக சொல்கிறார். அது இந்த காலத்தில் போட்டோவை மாற்றி வைத்ததாக சொல்கிறார். மேலும் தான் தப்பானவன் இல்லை என்றும் எடுத்து கூறுகிறார். தனக்கு என் குடும்பம் ரொம்ப முக்கியம் என்றும் கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here