பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது செழியன் குடித்து விட்டு ஜெனி வீட்டின் முன்பு சென்று கலாட்டா செய்கிறார். இந்த விஷயம் கேள்விப்பட்டு பாக்கியா மற்றும் எழில் நொந்து போகின்றனர்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டில் பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஜெனி இல்லாமல் செழியன் புலம்பி தள்ளி வருகிறார். இதனால் குடிக்கும் ஆளாகிறார். இது எதையுமே கண்டுகொள்ளாமல் ராதிகா பின்னால் சுற்றி திரிந்து வருகிறார் கோபி. இன்றைய எபிசோடில் செழியன் குடித்து விட்டு ஜெனி வீட்டிற்கு சென்று கலாட்டா செய்கிறார்.
என்னுடன் இப்போவே வீட்டுக்கு வா என்று கத்துகிறார். இதனால் கோவமடையும் ஜெனியின் அப்பா செழியனை வீட்டை விட்டே துரத்துகிறார். வீட்டிற்கு வரும் செழியனை பார்த்து பாக்கியாவும், எழிலும் மிகவும் வருந்துகின்றனர். என்னடா இப்படி ஆகிட்ட என்று எழில் கேட்க ஜெனி இல்லாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்று கெஞ்சுகிறார்.
அதன் பின் கோபியிடம் போய் விஷயத்தை சொல்ல எல்லாம் சரி ஆகிவிடும் என்று சொல்கிறார் கோபி. காலையில் செழியனை அனைவரும் விசாரிக்க ஆரம்பிக்க ஜெனி வீட்டிற்கு சென்றதை பற்றி சொல்கிறார். இதனால் ஈஸ்வரி பாட்டி கோவமடைகிறார். ஜெனி வீட்டிற்கு கால் செய்து திட்ட சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்