ஸ்கூலுக்கு போய் ஏன் மானத்தை வாங்குற, உன்னால என்ன பண்ண முடிஞ்சது?? உண்மை தெரியாமல் பாக்கியாவை இழிவாக பேசும் கோபி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். வீட்டில் பாக்கியாவை தேடிக்கொண்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாக்கியாவின் ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் கெஞ்சி கதறி ஒத்துக்கொள்ள வைக்கிறார். அடுத்து வீட்டில் கோபி, செழியன் என அனைவரும் ஸ்கூலுக்காக விசாரித்து கொண்டுள்ளனர்.

எங்குமே கிடைக்காத நிலையில் என்ன செய்வது என்று திணறிக்கொண்டுள்ளனர். அப்பொழுது பாக்கியா எங்கே என்று தேடிக்கொண்டுள்ளனர். அப்பொழுது ஸ்கூலுக்கு சென்றுள்ளதாக சொல்கிறார். இதனால் கோபி கோவமடைகிறார். அப்பொழுது பார்த்து பாக்கியாவும் எழிலும் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாக்கியாவை கோபி கண்டபடி திட்டுகிறார். ஏன் தேவையே இல்லாத வேலையை பாக்குற, என்று வீடே அவரை திட்டுகிறார். கோவமடையும் எழில் எங்க அம்மா செஞ்சது சரி தான் என்று கூறுகிறார். இதனால் அனைவரும் கிண்டல் செய்கின்றனர். அங்கே போய் உன்னால் என்ன செய்ய முடிந்தது என்று கேவலமாக பேசுகிறார் கோபி.

கடைசியில் எழில் இனியாவை ஸ்கூலுக்கு நாளையில் இருந்து வர சொல்லி விட்டார்கள் என்று சொன்னதும் அனைவரும் ஷாக்காகின்றனர். இனியா கதறி அழுகிறார். இந்த சான்ஸ் யாருக்கும் கிடைக்காது அதை பயன்படுத்திக்கிறதும், வீணாக்குறதும் உன் கையில் தான் இருக்கு என்று சொல்லிவிட்டு எதுவும் சொல்லாமல் மேலே செல்கிறார் பாக்கியா.

எழில் அந்த வீட்டில் அம்மா அவர் காலில் விழுந்ததை சொல்கிறார். இதனால் அனைவர்க்கும் என்னவோ போல ஆகி விடுகிறது. அடுத்து இனியா பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இனியாவின் நிலைமையை நினைத்து அனைவரும் வருத்தப்படுகின்றனர். பெரிய போராட்டத்தில் தான் இந்த பிரச்சனை முடிந்தது என்று கூறி வருத்தப்படுகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here