குடும்பத்திடம் இருந்து தப்பிக்க சந்தோஷ் வீட்டிற்கு செல்லும் இனியா – அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சினிமாவிற்கு சென்றதால் ஏற்படும் பிரச்சையால் டிசி கொடுக்கும் அளவிற்கு செல்கிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் நடவடிக்கை சில நாட்களாக மாறிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமாவிற்கு செல்கிறார். இதனை ஹெட் மாஸ்டர் கண்டுபிடிக்க பெரிய பிரச்சனையே ஆகிறது. வீட்டுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சந்தோஷ் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அடுத்ததாக அமிர்தா எழிலை பார்க்க வீட்டிற்கு வருகிறார். குடும்பமே அவரை வரவேற்கிறது. அமிர்தா பற்றி மாறி மாறி கேள்வி கேட்கின்றனர். கொஞ்ச நேரத்திலேயே குடும்பத்துடன் நெருக்கமாகிறார் அமிர்தா. பாக்கியாவிற்கு ஸ்வீட் கொடுக்கிறார் அமிர்தா.

அதன் பின் மசாலா பொடி தயாரிக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார். இத்தனை நாட்கள் பட்ட பாடை பற்றி சொல்கிறார் எழில்.  மேலும் தன் அம்மா தான் இந்த அளவிற்கு முன்னேற காரணம் என்றும் கூறுகிறார். இதை அனைத்தையும் பாக்கியா கேட்டு விடுகிறார்.

நாவூறும் சுவையில் “முட்டை கைமா” ரெசிபி – ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

அடுத்து இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். இங்கு இனியா சந்தோஷ் உடன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம் இனியாவை ஒரு மாதிரி பார்க்கின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் இனியாவை தேடுகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here