பத்திர விஷயத்தில் ராதிகாவிடம் மாட்டிக்கொள்ளும் கோபி – சிக்குவாரா??? சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வீட்டு பத்திரத்தை வேறு வக்கீலிடம் கொடுத்து செக் செய்கிறார் ராதிகா. கோபி மாட்டிக்கொள்வாரா?? அல்லது வழக்கம் போல சமாளித்து கொள்வாரா?? என்பதே இன்றைய எபிசோடு.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டை ராதிகாவிற்காக பேசி விடுகிறார். இதனை தெரிந்த கோபி இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பலவாறு யோசித்துக்கொண்டுள்ளார். இதனால் பத்திரம் சரியில்லை என்று கூறி ராதிகாவை திசை திருப்புகிறார்.

ஆனால் பாக்கியா அட்வான்ஸ் பணத்தை வீட்டில் உரிமையாளரிடம் கொடுத்து விடுகிறார். ராதிகா அந்த வீடு வேண்டாம் என்று சொல்ல பாக்கியாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மேலும் அந்த வீட்டு உரிமையாளர் அந்த பணத்தை பெயிண்ட் அடிக்க செலவு செய்து விட்டதாக வேறு சொல்கிறார்.

மேலும் கோவமாக சென்று விடுகிறார். பாக்கியாவிற்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அடுத்ததாக பாக்கியா நன்றாக சமைத்ததால் ஸ்கூலில் அனைவரும் பாராட்டி தள்ள அதனை வீட்டில் வந்து பெருமையாக சொல்கிறார் இனியா. ஆனால் கோபிக்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை.

அங்கு ஒரு லேடி செய்த கொடுமையை சொல்ல அதற்கு கோபி வீட்டுல சமைக்கிற காரியம்னு நெனச்சியா அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று சொல்ல எழில் அம்மாவுக்காக சப்போர்ட்டுக்கு வருகிறார். மேலும் ராதிகா வீட்டு பத்திரத்தை தனக்கு தெரிந்த வக்கீலுக்கு அனுப்பி வைத்து விசாரிக்கிறார்.

பத்திரத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும், தாராளமாக வாங்கலாம் என்றும் சொல்கிறார். இதனால் ராதிகா ஷாக்காகிறார். அடுத்ததாக கோபி வந்ததும் இதனை பற்றி விசாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here