விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா இத்தனை நாட்கள் செய்த தவறு எல்லாம் தெரியவர வீடே அதிர்ச்சியாகின்றனர். இன்றைய எபிசோடு பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இனியா சந்தோஷ் உடன் பழகிய விஷயங்கள் அனைத்தும் வீட்டிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில் வீடே குழப்பத்தில் உள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் இனியாவை திட்ட ஆரம்பிக்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தாத்தா பாட்டி என அனைவரும் இனியாவை திட்டுகின்றனர். கோபி இனியாவிடம் இனிமேல் இப்படி செய்ய கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். இனியவை மேலே அனுப்ப ஜெனியை துணைக்கு அனுப்புகின்றனர். அதன் பிறகு இனியாவிடம் வந்து பேசுகிறார்.
இத்தனை நாள் கண்டிக்காமல் விட்டது என் தவறு தான் என்றும் கூறுகிறார். மேலும் பல அட்வைஸ்களை கொடுக்கிறார். இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன் என்று கூறுகிறார். அடுத்து பாக்கிய வந்து பழைய படி திட்ட ஆரம்பிக்கிறார். மேலும் ஹாலில் பித்து பிடித்ததை போல அமர்ந்திருக்கிறார்.
எழில் வந்து பாக்கியவை சமாதானம் செய்கிறார். இத்தனை நாட்கள் பாக்கியவை குத்தம் சொல்லி கொண்டிருந்த கோபி இன்றைய எபிசோடில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது.