ராம் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதகுரு ஒருவர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில்:
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 50 விஐபிகளுடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை பூசாரி உதவியாளர் பிரதீப் தாஸுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. தற்காலிக கோவிலில் உள்ள மற்ற நான்கு மதகுருக்கள், தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் உட்பட அனைவர்க்கும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட போலீசார் ராம் ஜன்மபூமி வளாகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அவர்களில் நான்கு பேர் வளாகத்திற்குள் நிரந்தர கடமையில் இருந்தபோது, மீதமுள்ளவர்கள் சில நேரங்களில் ஷிப்ட் முறையில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 5 நிகழ்விற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக ராம் ஜன்மபூமி வளாகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அன்றைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கொரோனா வைரஸ்-பாசிட்டிவ் மதகுரு பிரதீப் தாஸ் ஒரு சடங்கின் போது முதல்வரின் அருகில் நிற்பதைக் காட்டுகிறது. கொரோனா வைரஸிற்கான அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பராமரித்து, திட்டமிட்டபடி இந்த திட்டம் முன்னேறும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது. தற்போது, அயோத்தியில் 375 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் சுமார் 200 பேர் கலந்து கொள்வார்கள். இந்த எண்ணிக்கையில் மதகுருக்கள், பாதுகாப்பு வீரர்கள், விருந்தினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இருப்பார்கள் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மும்பையில் 57% குடிசைவாழ் மக்களுக்கு கொரோனா எதிரப்பு சக்தி – ஆய்வில் தகவல்!!
இந்த விழாவிற்கு ராம் ஜனம்பூமி தளத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் பிரதமருக்கு ஹெலிபேட் உட்பட பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கான பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ராமர் வாழ்க்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன. அயோத்தி முழுவதும் ராட்சத சி.சி.டி.வி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன, எனவே பக்தர்கள் இந்த நிகழ்ச்சியைக் காணலாம் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய அனைத்து மூத்த பாஜக தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மூத்தவர்களும், அதன் தலைவர் மோகன் பகவத் உட்பட, இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.