தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாலை நேர சிறப்பு வகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத்திட்டத்தில் மாணவர்களின் வீட்டின் அருகிலே கல்வி கற்பிக்க மாதம் ரூ.1,000 தொகுப்பூதியத்தில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது இந்த தன்னார்வலர்களை சிறப்பிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி ஒன்றியத்தில் நிகழ்ச்சி ஏற்படுத்த பட்டு இருந்தது. இதில் வட்டார கல்வி அலுவலர் லட்சுமி நாராயணா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதனால் தளி ஒன்றியத்தில் உள்ள சுமார் 140 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கல்வி அலுவலர்கள் வழங்கி உள்ளனர்.
மேலும் வீர செட்டி ஏரி அருகில் உள்ள புத்தக நிலையத்திற்கு ரூ.2,000 மதிப்புள்ள புத்தகங்களும் விழாவில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.