ஆவி பிடிப்பது தற்போதைய சூழலில் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழி என்றும் ஆவி பிடிப்பதால் தேவையில்லாத வைரஸ் அழிந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை ஆனால் பொது இடங்களில் ஆவி பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் கூறியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவை தொடர்ந்து பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்
பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும்:
தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதற்கு பரிந்துரை செய்கின்றனர். ஆவி பிடிக்கும் போது சூடான காற்று மூக்கில் செல்லும் போது அங்கு மறைந்து இருக்கும் வைரஸ்கள் அழிந்துவிடும்.இதனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதற்கு பரிந்துரை செய்கின்றனர்.இதன் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மற்றும் சளி,இருமல் போன்ற அறிகுறிகளை உடையவர்கள் அனைவரும் ஆவி பிடித்து வருகின்றனர்.
தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது இடங்களில் ஆவி பிடிக்க கூடாது எனவும் இவ்வாறு பொது இடங்களில் ஆவிபிடித்தால் தொற்று மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் என்றும் அதனை ஊக்குவிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது நிலவி வரும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தனிமனித சுத்தமும் சமுதாய அக்கறையும் அவசியம் என கருதுகிறார்.எனவே பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.