இன்றைய நவீன காலகட்டத்தில் நாளுக்கு நாள் விஞ்ஞான வளர்ச்சி உடன் சேர்ந்து பல புது கண்டுபிடிப்புகளும் வளர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் தற்போது ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் ஒரிஜின் ஆகிய மூன்று நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி புதிய நிறுவனம் ஒன்றை ஜப்பான் நாட்டில் 2026 ஆம் ஆண்டு துவங்க உள்ளனர்.

இதன் மூலம் இனி வரும் நாட்களில் ஓட்டுனரே இல்லாத கால் டாக்ஸியை உருவாக்க உள்ளார்களாம். இதற்கு டிரைவர்கள் இருக்க மாட்டார்களாம். வாடிக்கையாளர்கள் ஆப் மூலம் புக் செய்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கால் டாக்ஸியில் குறைந்தபட்சம் ஆறு பேர் பயன்படுத்தலாம் என்றும் முதற்கட்டமாக டோக்கியோவில் இதன் சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அங்கு வெற்றி அடைந்ததை தொடர்ந்து மற்ற இடங்களிலும் படிப்படியாக பயன்பாட்டுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.