வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நன்கு மழை குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. அதன் படி இன்று (23 ஆகஸ்ட் 2021) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேலும் நாளை (24, ஆகஸ்ட் 2021) சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழையும், பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோல் வருகிற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்