ஆகஸ்ட் 21,22 ம் தேதிகளில் தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை – உங்க மாவட்டமும் லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!!

0
தமிழ் நாட்டில் வரும் 21, 22 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, வரும் ஆகஸ்ட் 21, 22-ம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 
அதே சமயம் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here