தமிழகத்தில் 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கியது. இதில் பள்ளி மாணவர்கள், சிறைவாசி, தனித்தேர்வர் என சுமார் 8.5 லட்ச பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆனால் நடந்து முடிந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை. இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதிற்கான காரணங்களை கண்டறிய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் படி பெரும்பாலான மாணவர்கள் கொரோனா காலங்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய வேலைக்கு சென்றுள்ளதாகவும், 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்ததால் அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி மறு வாய்ப்பாக வருகிற ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.
அரசுப்பள்ளிகளில் மார்ச் 20, 21ம் தேதிகளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!
இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு குறிப்பிட்ட வருகை பதிவு வரைமுறையை அதிரடியாக பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது. அதன்படி ஒரு கல்வியாண்டில் 2, 3 நாட்கள் பள்ளிகளுக்கு வந்திருந்தாலே போதும் பொதுத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மாணவர்களை எப்படியாவது பொதுத்தேர்வு எழுத வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தேர்வெழுத அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.