ஷிவாங்கியிடம் இத்தனை நாள் சொல்லாமல் இருந்த ரகசியத்தை வெளிப்படுத்திய அஸ்வின் – இணையத்தில் வைரல்!!

0

குக் வித் கோமாளி சீசன் 2 முடிவடைய இருக்கும் நிலையில் அஸ்வின் கண்கலங்க வைக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை ஸ்பெஷலாக ஷிவாங்கிக்காக பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி அஸ்வின்

விஜய் டிவியில் பிரபலமாகி ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பலருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை படங்களில் நடித்தாலும் கிடைக்காத புகழ் குக் வித் கோமாளியின் கலந்து கொள்பவர்களுக்கு கிடைத்தது. வனிதா, ரம்யா பாண்டியன், அஸ்வின் என லிஸ்ட் போட்டுக்கொண்டே செல்லலாம். அதுவும் கோமாளிகள் தான் அல்டிமேட்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் சீசனை விட 2வது சீசன் அதிக பிரபலமடைந்தது. பல புதுவிதமான கான்செப்ட்டில் குக்கிங் செய்து வந்தனர். இப்படி இருக்க இந்த நிகழ்ச்சி தற்போது முடிவடைய உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்து வந்தனர். மேலும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, குக் வித் கோமாளி ஷோ முடிவடைந்ததை தற்போது வரை தன்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்த இடம் என்றால் அது குக் வித் கோமாளி தான்.

பாரதியும் கண்ணம்மாவும் ஒன்னு சேர்ந்துட்டாங்களா?? பல ட்விஸ்டுகளுடன் வெளியான ‘பாரதி கண்ணம்மா’!!

மேலும் மக்கள் இத்தனை நாள் தனக்கு கொடுத்த சப்போர்ட்டுக்கு மிகவும் நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்பெஷலாக ஷிவாங்கி பற்றி சொல்லியே ஆக வேண்டும். இத்தனை நாட்கள் தன்னுடன் சகஜமாக பழகியதற்கு மிகவும் நன்றி. நீ அடிக்கடி என்கிட்டே கேட்டுட்டே இருந்த ஒரு விஷயத்தை இப்போ சொல்றேன். நிஜமாவே உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன். நீ என்ன மிஸ் பண்ணுவியா? என்று கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here