அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சர்ப்ரைஸ்.. சிறப்பு இடஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் ஏற்ப்பு!!

0

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவர்களின் முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்துள்ளார்.

75வது சுதந்திர தின நினைவு தூண்..

அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்களுக்கு இந்த மசோதா மிக உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி டி. முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here