PAK VS AUF.., பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்.., இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆப்கானிஸ்தான்?

0
PAK VS AUF.., பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்.., இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆப்கானிஸ்தான்?
PAK VS AUF.., பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்.., இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆப்கானிஸ்தான்?

ஆசிய கோப்பை தொடருக்கான சூப்பர் 4 ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ள நிலையில் இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தான் செய்ய போவது என்ன?

ஆசிய கோப்பை தொடருக்கான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியதில் இலங்கை அணி இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கான 4 வது ஆட்டத்தில் மோத உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் சார்ஜாவில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் முதல் முதலாக இந்திய அணியை வீழ்த்திய உற்சாகத்தில் ஆப்கானிஸ்தானை எதிர் கொள்ள உள்ளது. அதே சமயம் அந்த அணிக்கு வெற்றி பெறுவது சந்தேகத்திற்குரிய விஷியமாக உள்ளது. அதாவது அணியில் விளையாடி வந்த முகமது ரிஸ்வான் போட்டியில் பங்கேற்பது இன்னும் உறுதியாக வில்லை. ஏனென்றால் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்னும் சரியாகாத நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்பது தெரியவில்லை.

 

இதனால் முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் அணியில் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் நல்ல பார்மில் இல்லை என்றாலும் பந்து வீச்சில் சிறப்பாக விளையாட கூடிய வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டியில் நீடிக்க முடியும். இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் யார் இறுதிப் போட்டிக்குள் நுழையப் போகிறார்கள் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here