6 அணிகள் பங்கேற்கும் நடப்பு ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று பங்கேற்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பிரச்சனை தான்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பாதுகாப்பின்மை காரணமாக இந்திய அணி அங்கு சென்று விளையாட தயக்கம் காட்டுகிறது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை ஒரு பொதுவான இடத்தில் வைக்க வேண்டும் என BCCI பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் ஆலோசனை நடத்தியது.
தமிழக மகளிருக்கு மாதம் ரூ.1000.., இதுதான் நடக்க போகுதா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!
ஆனால் இதற்கு வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்குமா?? என்ற சந்தேகம் நிலவியுள்ளது. அப்படியே பங்கேற்றாலும் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதிப்பார்களா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.