
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணி மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்திருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த இலக்கை துரத்த களமிறங்கிய இளம் இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, பங்களாதேஷின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். இதனால், இந்திய அணி 49.5 ஓவரில் 259 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக இந்திய சார்பாக சுப்மன் கில் மட்டுமே 121 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.