ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. ஆறு அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில், இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மோத போவது, இலங்கை அணியா? பாகிஸ்தான் அணியா? என்பதுதான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது. இதையடுத்து, இந்த இரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த போட்டியில், வெல்லும் அணி கட்டாயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மாறாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முடிவு இல்லாமல் ரத்தனால் (வாஷ்-அவுட்) புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இலங்கை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நிகழ்ந்தால், ஆசிய கோப்பையை வெல்வதற்கான கடைசி யுத்தத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதும். பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற்றப்படும்.
ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்திய கால்பந்து அணியில் இந்த 17 பேருக்கு தான் இடம்…, வெளியான அறிவிப்பு!!