முதலிடம் பிடித்து அசத்தும் இந்திய வீரர்கள்…, ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் தொடரும் சாதனை!!

0
முதலிடம் பிடித்து அசத்தும் இந்திய வீரர்கள்..., ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் தொடரும் சாதனை!!
முதலிடம் பிடித்து அசத்தும் இந்திய வீரர்கள்..., ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் தொடரும் சாதனை!!

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் முதலிடம் பெற்று அசத்தி உள்ளனர்.

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்:

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரின் 15 வது சீசன் தென் கொரியாவில் உள்ள டேகுவில் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் பிரிவில் திவ்யான்ஷ் சிங் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இவரை போல, ஆண்களுக்கான யூத் பிரிவில் மனே பர்த் ராகேஷ் தங்கப்பதக்கத்தையும் மற்றும் பெண்களுக்கான பிரிவில், யுக்தி ராஜேந்திர, பானோட் கௌதமி மற்றும் ஹேசல் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தி இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வரிசையில், அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய ஜூனியர் பெண்கள் SEN திலோத்தமா, ரமிதா மற்றும் நான்ஸி கொரிய வீராங்கனைகளுக்கு எதிராக போட்டியிட்டு 16-2 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளனர். இந்திய ஜூனியர் ஆண்கள் அணியில் பன்வர் திவ்யான்ஷ் சிங், ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரி, விதித் ஜெயின் 16-10 என்ற புள்ளி கணக்கில் கொரிய வீரர்களை வீழ்த்தினர்.

“தளபதி 67″ல் நைசாக ஜகா வாங்கிய பிரபல இயக்குனர்..,  சோகத்தில்  மூழ்கிய ரசிகர்கள்!!

இந்திய சீனியர் பெண்கள் அணியில் கோஷ் மெஹூலி, வாலறிவன் இளவேனில் மற்றும் சஜ்ஜனர் மேகனா ஆகியோர் கொரிய வீராங்கனைகளுக்கு எதிராக 16-10 என்ற புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றனர். இதன் மூலம், இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் அணியினர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here