ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்து இந்திய வீராங்கனைகள் அசத்தி உள்ளனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ஜோர்டானில் நடைபெறு வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி குவித்து வருகின்றனர். ஏற்கனவே ஆடவர் பிரிவில் நேற்று ஒரே நாளில் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர். இந்த வகையில், இறுதி போட்டியின் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான லவ்லினா, உஸ்பெகிஸ்தானின் ரஸ்மெதோவாவை எதிர்கொண்டார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில், தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்திய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இவர் வெல்லும் முதல் தங்கம் இதுவே ஆகும். இதே போல, 63 மற்றும் 81 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கணைகளான பர்வின் ஹூடா மற்றும் சவீட்டி, ஜப்பான் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனைகளை எதிர்த்து 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும், 2 தங்கப் பதக்கங்கள் கிடைந்தன. இதனை தொடர்ந்து, 81 கிலோக்கு மேற்பட்ட எடை பிரிவின் இறுதிப் போட்டியில், முதல் சுற்றிலேயே ஜோர்டான் வீராங்கனை சில செயல்களால் தகுதி நீக்கம் அடைந்ததால் இந்தியாவின் ஆல்பியா பதான் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனால், இந்தியா, நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 தங்கங்களை அள்ளியது.