இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த தவானின் இடம் குறித்து அஸ்வின் வெளிப்படையாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.
தவான்:
இந்திய அணி நடப்பு ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடரை எதிர் நோக்கி பல திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் குறிப்பாக, இந்திய அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடிய முன்னணி வீரர்களை ஓரம் கட்டி விட்டு, இளம் வீரர்களுக்கே அதிக வாய்ப்பினை பிசிசிஐ வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, கடந்த ஆண்டு, ரோஹித் சர்மா இல்லாத நிலையில், இந்திய அணியை தவான் தான் பெரும்பாலான போட்டிகளில் வழி நடத்தி இருந்தார். இவர், கடந்த ஆண்டு மட்டும், 22 போட்டிகளில் 688 ரன்களை அடித்துள்ளார். ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு தொடரில் கூட இவர் இடம் பெறவில்லை.
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: பதக்கம் வெல்ல காத்திருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இதோ!!
இது குறித்து, இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், சில கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது, இஷான் கிஷன், சுப்மன் கில் இருவரும் தவானுக்கான இடத்தை பறித்து விட்டனர். இதனால், தவான் இந்திய அணியில் இடம் பிடிப்பது தற்போது பெரும் கேள்வி குறியாகி விட்டது. இந்த இரு இளம் வீரர்கள் இரட்டை சதம் அடித்து விட்டார்கள் என்பதற்காக தவானை ஓரம் கட்டுவது சரி ஆகாது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.